வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (09) கொரோனா தொடர்பான விசேட கூட்டம் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமார் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாகவும், நோயினை கட்டுப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இவ் விசேட கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன், வன்னி மாவட்ட கட்டளைத்தளபதி, வன்னி பிரதி காவல்துறை மா அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.