கொரோனா பரவல் நிலையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் மனிதாபிமான தன்மையுடன் செயற்பட வேண்டும் என தெரிவித்து 22 பெருந்தோட்ட நிறுனங்களுக்கு கடிதம் மூலம் கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கொழுபில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவல் நிலையில் பெருந்தோட்ட மக்கள் வேலைநாட்கள் குறைவடைந்து பாதிக்கப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.