வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று (24) காலை 8 மணிமுதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
இதன்போது உரிய சுகாதார நடைமுறைகளை பேணி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத முதியவர்கள் வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுச் சென்றனர்.
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி திலீபன் மற்றும் இராணுவ அதிகாரிகள், சுகாதாரதரப்பினர் கலந்து கொண்டனர்.