மட்டக்களப்பு ஆரையம்பதியில் பாடசாலை ஒன்றின் கணனி அறை கதவை உடைத்து கணனிகள் கொள்ளை

551d90709b4cb
551d90709b4cb

மட்டக்களப்பு காத்தான்குடி காவற்துறை பிரிவிலுள்ள ஆரையம்பதி செல்வநகர் சிவா வித்தியாலயத்தின் கணனி அறை கதவை உடைத்து அங்கிருந்த  மூன்று கணனிகள் மவுஸ், கீவோட் என்பன நேற்று  புதன்கிழமை (1) இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலை பூட்டப்பட்டிருந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு பாடசாலையின் கணனி பிரிவு அறையின் கதவை உடைத்து அங்கிருந்த மூன்று கணனிகள், ஒரு மவுஸ், ஒரு கீவோட் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது 

இது தொடர்பாக பாடசாலை அதிபர் இன்று வியாழக்கிழமை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தததையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளையிடப்பட்ட பகுதியை பார்வையிட்டு காவற்துறை தடவியல் பிரிவை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.