நாட்டில் நேற்று 474,116 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இதற்கமைய, 58,181 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 400,949 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
3,584 பேருக்கு அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசியும், 348 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
அதேநேரம், 10,725 பேருக்கு மொடர்னா இரண்டாம் தடுப்பூசியும், 131 பேருக்கு முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
18 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 180 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.