பிரபல போதைப்பொருள் வர்த்தகராக கருதப்படும் ‘சன்ஷைன் சுத்தா‘ எனப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை, வரக்காபிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவர், மாகந்துரே மதூஷுக்கு மிகவும் நெருக்கமான உதவியாளராக செயற்பட்டு வந்திருந்த ஒருவராவார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.