சமந்தா விவாகரத்து: 3 மாசத்துல எல்லாம் முடிந்து விடுமாம்

samandha.jpg 1
samandha.jpg 1

சமந்தாவும், அவரின் காதல் கணவரான நாக சைதன்யாவும் விவாகரத்து பெறுவது உறுதி என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் இருக்கும் சமந்தா தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவர் குடும்பத்து பெயரை திடீர் என்று நீக்கினார். அதை பார்த்தவர்கள் சமந்தாவும், அவரின் காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவும் பிரியப் போகிறார்கள் என்று பேசத் தொடங்கினார்கள்.

நாட்கள் செல்ல செல்ல அந்த பேச்சு அதிகரித்தது. இந்நிலையில் சமந்தா, நாக சைதன்யாவுக்கு நெருக்கமானவர்கள் கூறியிருப்பதாவது,

சமந்தாவுக்கு தன் மீது தான் கவனம். அவர் கவர்ச்சியாக நடிப்பதும், படப்பிடிப்புக்கள் நடத்துவதும் கணவர் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. அந்த போக்கை மாற்றிக் கொள்ளுமாறு பலமுறை சமந்தாவிடம் கூறியும் அவர் கேட்கவில்லை.

சமந்தா, நாக சைதன்யா குடும்ப நீதிமன்றத்தில் பலமுறை சிகிச்சை பெற்றும் மனம் மாறவில்லை. அவர்கள் விவாகரத்து பெறுவது உறுதியாகிவிட்டது. விவாகரத்து 2 முதல் 3 மாதங்களில் முடிந்துவிடும் என்றார்கள்.

தன் மகனின் திருமணம், விவாகரத்தில் முடிந்துவிடக் கூடாது என்று நினைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினாராம் நாகர்ஜுனா. ஆனால் அவர் பேசிப் பார்த்தும் எதுவும் மாறவில்லையாம்.

நடிப்பில் இருந்து ஓய்வெடுக்கப் போவதாக அறிவித்தார் சமந்தா. இந்நிலையில் அவர் புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். சமந்தாவுக்கு பொலிவுட் படங்களில் நடிக்க விருப்பமாம்.