புத்தளம் பகுதியில் உரிமையாளர் ஒருவரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் கூரையின் மேலிருந்து கீழே வீழ்ந்த மூன்று ஆந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த ஆந்தைகள் என அழைக்கப்படும் அரிய வகையைச் சார்ந்ததென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ் ஆந்தைகள் நிக்கவரெட்டிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.