வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்துவரும் 17 வயது நிரம்பிய சிறுவன் அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை எனவே அவரைக்கண்டுபிடித்து தருமாறு குறித்த சிறுவனின் தந்தை வவுனியா காவல் நிலையத்தில் இன்று (08) அதிகாலை முறைப்பாடு மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இச்சம்பவம் குறித்து முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் மணிவண்ணன் சிவானுஜன் 17 வயதுடைய சிறுவன் நேற்று (07) காலை அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார் எனினும் நேற்று இரவு வரையில் வீடு திரும்பவில்லை . எனவே அவரைக்கண்டு பிடித்துத்தருமாறு அவரது தந்தை காவல் நிலையத்தில் இன்று அதிகாலை முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது