முல்லைத்தீவில் இராணுவத்தினரால் சிரமதானப் பணி

77 720x375 1
77 720x375 1

முல்லைத்தீவு நகர கடற்கரையில் இராணுவத்தினரால் சிரமதானப் பணி, இன்று (10) மேற்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு நகர கடற்கரையானது தொடர்ச்சியாக திண்மக்கழிவுகள் சூழப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் ஊடாக வெளியிடப்படுகின்ற கழிவுகளும் சுற்றுலாப் பயணிகளால் கொண்டு வந்து சேர்க்கும் கழிவுகளும் இவ்வாறு முல்லைத்தீவு நகர கடற்கரையின் அழகை சீரழித்து வருகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டே இராணுவத்தினர் இந்த பணியினை முன்னெடுத்துள்ளனர். இதற்கு பிரதேச சபை தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்