கொஹுவலை மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் காரணமாகக் கொழும்பு – ஹொரணை பிரதான வீதியின் கொஹுவலை சந்தி பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று (21) முதல் எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை இந்தப் போக்குவரத்து மட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் முடிந்தவரை வேறு பாதையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.