முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவற்துறை பிரிவுக்குட்ப்பட்ட கைவேலிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த புதுக்குடியிருப்பு காவற்துறையினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களுடன் இருவரை கைது செய்துள்ளனர்
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது
கைவேலிப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு உழவு இயந்திரங்களும் காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
குறித்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு காவற்துறையினர் குறித்த நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்