ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் திருமண விருந்தில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இசை நிகழ்ச்சிகளுக்குத் தலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டமையே இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய, குறித்த திருமண நிகழ்விற்கு சென்ற தலிபான்கள், அங்கிருந்தவர்களுக்கு இசை நிகழ்ச்சியை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
எனினும், இதற்கு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட மோதலின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.