தங்காலை பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் பெண்ணொருவருடன் இணைந்து ஹெரோயின் பொதி செய்து கொண்டிருந்த காவல்துறை அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை வலய குற்றப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 28 கிராம் 580 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.