நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாட்டின் சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பிரான்ஸ் அரசாங்கத்துடன் இணைந்த செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன ஆகியோருக்கிடையே நேற்று (14) இடம்பெற்றது.
‘சூடி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயற்திட்டம் தற்போது இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்படுவதாகப் பிரான்ஸ் தூதுவர் தெரிவித்துள்ளார்.