மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

kaithu
kaithu

நுவரெலியா, பொகவந்தலாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட செப்பல்டன் தோட்டத்தில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 25, 31 வயதுகளையுடைய இருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.