20 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ஆவது தடுப்பூசி

கலாநிதி ஹேமந்த ஹேரத்
கலாநிதி ஹேமந்த ஹேரத்

வெவ்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 3ஆவது செயலூக்கி தடுப்பூசியை வழங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து வழிகாட்டல் கோவை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக, நேற்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

செயலூக்கி தடுப்பூசி தேவைப்படுபவர்களுக்கு முன்னதாக எந்த தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தாலும், அதன் இரண்டாம் தடுப்பூசி வழங்கப்பட்டு, ஒரு மாதத்தின் பின்னர் மூன்றாம் தடுப்பூசியை வழங்க முடியும் எனக் குறித்த சுகாதார வழிகாட்டலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.