பிரபல வர்த்தகரும், கொடையாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ்தானின் தந்தையாருமான அல்ஹாஜ் எஸ்.கே. காதர் அவர்களின் அஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (20) இடம்பெற்றது.
வர்த்தகர் சி.விவேகாநந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மற்றும் அவரது குடும்பஉறவினர்கள், சமூக ஆர்வலர்கள்,வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
மௌனப்பிரார்த்தனையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்னார் தொடர்பான அஞ்சலி உரைகளும் இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் தந்தையாரான அல்ஹாஜ் காதர் அண்மையில் சுகவீனம் காரணமாக கொழும்பில் காலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது