18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மரண தண்டனையளிக்கும் யோசனை நிராகரிப்பு!

court
court

நீதிமன்றத்தின் கருத்துக்கு அமைய, குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதித்தல் அல்லது அதனைக் குறித்துக் கொள்ளக் கூடாது எனவும், குறித்த தண்டனைக்குப் பதிலாக ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கும் வரை அந்நபரை தடுப்புக் காவலில் வைத்திருக்கும் தண்டனையை வழங்கும் வகையில் தண்டனைச் சட்டக்கோவையில் 53 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாதெனக் கூறும் ஏற்பாடுகள் குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தின் 281 ஆம் உறுப்புரையில் உட்சேர்க்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனால், நிலவுகின்ற நிச்சயமற்ற தன்மையை நீக்குவதற்காக குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தில் குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குற்றவியல் வழக்கு கோவைச் சட்டத்தில் 281 ஆவது உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.