2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது நாடாளுமன்றத்திற்கு தெரிவான 13 உறுப்பினர்கள் தங்களது உத்தியோகப்பூர்வ இல்லத்தை மீள கையளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த 13 பேரும் கடந்த பொதுத் தேர்தலின் போது தோல்வியடைந்துள்ளனர்.
அவர்களது பொருட்கள் வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து அகற்றப்படாமல் தொடர்ந்தும் அங்குள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 13 பேரில் பெரும்பாலானோர் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.