கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 460 பேர் குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 579,780 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 18,206 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனை மற்றும் வீடுகளில் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.