வவுனியா கூமாங்குளத்தில் வீடு ஒன்றில் சமைத்துக்கொண்டிருந்த சமயத்தில் சமையல் எரி வாயு அடுப்பு இன்று (06) வெடித்துள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முதியவர் ஒருவர் சமைத்து கொண்டிருந்த போது திடீரென்று சமையல் எரி வாயு அடுப்பு வெடித்துள்ளது. இதனையடுத்து வீட்டார் சமையல் எரி வாயு சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் தடவியல் காவற்துறையினரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்