நாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (06) உறுதிப்படுத்திய மரணங்களில் 17 ஆண்களும் 9 பெண்கள் உள்ளடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட இருவர் உள்ளடங்குகின்றனர்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15, 621 ஆக அதிகரித்துள்ளது.