தங்கம் வென்ற யுவதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டி பணப்பரிசு வழங்கி வைப்பு!

IMG 20220208 WA0032
IMG 20220208 WA0032

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் இல்லாமல் நாட்டிற்கும் பெருமை சேர்த்திருந்தார்

IMG 20220208 WA0037

தந்தையை இழந்த நிலையில் சாதித்த   குறித்த யுவதியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி கௌரவித்து  வருகின்ற நிலையில் இன்றைய தினம் (08) குறித்த யுவதியை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவர்களுடைய பாரியார் ஜலனி பிரேமதசா ஆகியோர் குறித்த யுவதியை கௌரவித்தோடு அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணம் பரிசினையும் வழங்கி கௌரவித்துள்ளனர்

IMG 20220208 WA0033

ஐக்கிய மக்கள் சக்தியினுடைய முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமி அவர்களின் ஏற்பாட்டில்  முல்லைத்தீவிலிருந்து குறித்த யுவதி கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு  அங்கு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து யுவதி கௌரவிக்கப்பட்டுள்ளதோடு பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது 

 ஐக்கிய மாதர் சக்தியினூடாக ரூபா 100,000 பணத்தினை இந்துக்காதேவியை ஊக்குவிக்கும் முகமாக வழங்கி வைத்து  . எதிர்காலத்தில் மேலும் உதவிகளை வழங்க உறுதி வழங்கியுள்ளார் .