சிறுவர் பூங்காவில் ரவுடிகள் அட்டகாசம்: இருவர் காயம்

IMG 9801
IMG 9801

வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று மாலை மதுபோதையில் நுழைந்த மூன்று றவுடிகள் பூங்காவில் பணியாற்றிவரும் முதியவர் உட்பட இருவரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றனர்.


குறித்த சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

முச்சக்கர வண்டி ஒன்றில் சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்த குறித்த குழுவினர் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதனை அவதானித்த நபர் ஒருவர் அதனை தடுக்க முற்பட்டபோது அவரையும் தாக்கி காயப்படுத்தியதுடன் அவரது பெறுமதி மிக்க தொலைபேசியையும் உடைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். 
சம்பவம் தொடர்பாக அவசர காவற்துறையினருக்கு தகவல் தெரிவித்த போதும் நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு காவற்துறையினர் சமூகமளிக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்