வவுனியா காவற்துறையினரால் இளைஞன் ஒருவர் கைது

kaithu
kaithu

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறையினரால் 22 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் இன்று (10) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சந்தை உள்வட்ட வீதியில் அமைந்துள்ள நகை விற்பனையகம் ஒன்றில் கடந்த 4 ஆம் திகதி சங்கிலி ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா  தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் திருடப்பட்ட சங்கிலி மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.