இன்று முதல் மீண்டும் சந்தைக்கு சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பம் – லிட்ரோ

images 2
images 2

நாணயக் கடிதங்களை திறக்க அனுமதி கிடைத்ததையடுத்து இன்று முதல் சந்தைக்கான சமையல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடி காரணமாக எரிவாயு இறக்குமதிக்கு நாணயக் கடிதங்களை வழங்குவதனை கடந்த வாரம் வங்கிகள் தற்காலிகமாக நிறுத்தியிருந்தன.

இதனையடுத்து, நாட்டின் பிரதான சமையல் எரிவாயு நிறுவனங்கள் சந்தைக்கான எரிவாயு விநியோகத்தை இடை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.