வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஆ.லோகேஸ்வரன் தலைமையில் ஐயாத்துரை மண்டபத்தில் பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று (30) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் சித்தியடைந்த 190 மாணவர்களுக்கு கெளரவிப்பும், தரம் ஐந்து புலமைப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை தயார்படுத்திய வகுப்பு ஆசிரியர்கள் கெளரவிப்பும் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றது.
மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதி சுகாதார வைத்திய அதிகாரி வவுனியா நகரம், டெங்கு கட்டுப்பாடு பொறுப்பதிகாரி பணிமனை, பாடசாலையின் பழைய மாணவருமான வைத்திய கலாநிதி இ. பிரசன்னாவும் சிறப்பு விருந்தினர்களாக த. சிறிகாந்த, பிரதி அதிபர் ஆரம்பப்பிரிவு கே.முல்லைக்குமரன், பிரதி அதிபர் நிர்வாகம் வை. விஜேந்திரன், பிரதி அதிபர் பெளதீகவளம் திருமதி ச.இரவீந்திரன், பிரதி அதிபர் இணைப்பாடவிதானம் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.