அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதற்கு புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதத்தில் மாத்திரம் 106 மருந்துகள் மற்றும் 38 மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் 2 வாரங்களில் 17 மருந்து வகைகளையும், 81 மருத்துவ உபகரணங்களையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.