பரீட்சை கடமைகளுக்காக செல்லும் பரீட்சைகள் தொடர்பான பணிக்குழாமினருக்கு இடையூறு ஏற்படுத்தாமல் எரிபொருள் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பத்தை வழங்குமாறு பரீட்சைத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாளைய தினம் கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளமைக்கு அமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.