850 லீற்றர் பெற்றோலுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

kaithu
kaithu

மட்டக்களப்பில் 850 லீற்றர் பெற்றோலை கொண்டு செல்ல முற்பட்ட சந்தேகநபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்களைக் கண்டுபிடிப்பதற்காக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.