கட்டாய விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீதான அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளது.
குறித்த வழக்கு விசாரணை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று (08) நீதிமன்றத்தில் முன்னிலையாகி குறித்த சம்பவம் தொடர்பான விடயங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தனர்.
பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாவிடின் வேறு ஒரு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? என்பது தொடர்பான விடயங்கள் அடங்கிய இறுதி அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் 18ம் திகதி நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
அதற்கமைய வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 18ம் திகதி வரை ஒத்தி வைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க உத்தரவிட்டார்.
அதுவரை சந்தேக நபரான பூஜித் ஜயசுந்தர விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தால் அவரை அன்றைய தினத்தில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.