மட்டக்களப்பு சந்திவெளி பிரதேச பஸ் திரிப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பாதசாரிகள் கடவையினை பொருத்தமான இடத்தில் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு அருகாமையில் பேருந்து தரிப்பிடம் அமையப்பெற்றுள்ளமையினால் மக்கள் குறித்த பாதசாரிக் கடவையினை அச்சத்துடன் பயன்படுத்த வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
பேருந்து தரிப்பிடத்தை கவனத்தில் கொள்ளாது, அதற்கு மிக அருகாமையிலேயே பாதசாரிகள் வீதியை கடந்து செல்ல வெள்ளைக் கோட்டினை அமைத்திருப்பது பாரிய தவறாகும்.
பேருந்து தரிப்பிடத்தில் பஸ் ஒன்று நிறுத்தியிருக்கும்போது, பின்னால் வரும் வாகனங்கள், நிறுத்தப்பட்டிருக்கும் பஸ், தரிப்பிடத்துக்காக நிறுத்தப்பட்டிருக்கிறதா? அல்லது வெள்ளைக்கோட்டின் வழியாக யாரும் பயணிப்பதால் நிறுத்தப்பட்டிருக்கிறதா என சந்தேகம் ஏற்படுகிறது.
இதனால் சந்தேகத்துடன் வாகனத்தை செலுத்துவதால் பலரின் உயிர்களை காவு கொண்ட இடமாக இந்த வெள்ளைக்கோடு காணப்படுகிறது.
எனவே தயவுசெய்து இவ் வெள்ளைக்கோட்டினை பொருத்தமான இடத்துக்கு மாற்றியமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.