அஸர்பைஜான் நாட்டில் விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் இலங்கை மாணவிகள் மூவர் நேற்று (10) பரிதாபமாக உயிரிழந்தனர்.
மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட தீயின் புகையினால் மூச்சுத் திணறி இம்மாணவிகள் உயிரிழந்துள்னர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பாகுவிலுள்ள வெஸ்டர்ன் கஸ்பியின் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் எனவும், மூவரும் மேற்படி குறித்த விடுதியில் இரு மாதங்களாக வசித்து வந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் தடயவியல் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த மாணவிகளின் சடலங்களை எதிர்வரும் சில தினங்களில் இந்நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது