ஓமன் நாட்டு தலைவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவிற்கு ஐ.நா. பொது செயலாளர் அன்டனியோ குட்டரஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அன்டனியோ குட்டரஸின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஓமன் சுல்தான் காபூஸ் பின் சையத் மறைவுக்கு ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அரச குடும்பத்திற்கும், அரசாங்கத்திற்கும், ஓமான் நாட்டு மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.