உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

elephant
elephant

கடந்த வருடம் யானைகளின் இறப்பு அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக சுற்றுச்சூழல் குழுக்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடத்தில் மாத்திரம் 361 யானைகள் உயிரிழந்துள்ளன.

இலங்கையில் சுமார் 7,500 காட்டு யானைகள் உள்ளன. அவற்றைக் கொல்வது சட்டபடி குற்றம்.

மின்-தடுப்புகள், நஞ்சு, வெடிபொருள் ஆகியவற்றைக் கொண்டு யானைகள் கிராமப்புற மக்களால் கொல்லப்படுகின்றதுடன், தந்தங்களுக்காக வேட்டையாடப்படும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.