கடந்த வருடம் யானைகளின் இறப்பு அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக சுற்றுச்சூழல் குழுக்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வருடத்தில் மாத்திரம் 361 யானைகள் உயிரிழந்துள்ளன.
இலங்கையில் சுமார் 7,500 காட்டு யானைகள் உள்ளன. அவற்றைக் கொல்வது சட்டபடி குற்றம்.
மின்-தடுப்புகள், நஞ்சு, வெடிபொருள் ஆகியவற்றைக் கொண்டு யானைகள் கிராமப்புற மக்களால் கொல்லப்படுகின்றதுடன், தந்தங்களுக்காக வேட்டையாடப்படும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.