தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரினூடாக தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டரில் உலகம் முழுவதும் துடிப்பு மிகு தமிழ் சமூகம் பொங்கலை கொண்டாடுகிறது. அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து. பொங்கல் திருநாள் அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களால் நிரப்பிடட்டும், என்று பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.
அதேபோல் பிரதமர் மோடி ஆங்கிலத்திலும் வாழ்த்து அட்டை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.