தீ விபத்தில் உயிரிழந்த இலங்கை மாணவிகளின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

azharbaijan
azharbaijan

அஸர்பைஜான் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மூன்று இலங்கை மாணவியர்களினதும் சடலங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இன்று காலை 9.15 அளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக, சடலங்கள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு சடலங்கள் அவர்களின் பெற்றோர்களிடம் கையளிப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவிகள் தங்கியிருந்த இரண்டு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளியேறிய விஷ வாயுவை சுவாசித்தமை காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.