பிரதி சபாநாயகர் ஆனதா குமாரசிறி தலைமையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் புதிய மதுபான சாலைகளுக்கு வழங்கப்படும் அனுமதி தொடர்பாக சபையில் பேசப்பட்டது.
இதன்போது சபையில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.
மேலும் போதைப்பொருள் ஒழிப்பில் முன்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டிய ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி மீது சேறு பூச முற்படக்கூடாது என அவர் தெரிவித்திருந்தார்.