இலங்கை அணியின் இளம் வேகப் பந்து வீச்சாளர் மதீஷா பதிரன 175 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசி சொய்ப் அக்தரின் சாதனையை முறியடித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய- இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் சொய்ப் அக்தர் கடந்த 2003ம் ஆண்டு 161.3 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசியிருந்தார். இந்நிலையில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் மதீஷா பதிரன (17 வயது) 17 வருடங்களின் பின்னர் முறியடித்துள்ளார்.
குறித்த பந்து வீச்சின் வேகமானது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பதிவாகி இருக்கக்கூடும் என விமர்சனங்கள் எழுந்தபோதிலும் ஐ.சி.சி. சார்பில் இதற்கு மறுப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.