இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 500 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட தேசிய கொடியொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீதாவகபுரவில் உள்ள விகாரை ஒன்றில் இந்த தேசிய கொடி உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 72ஆவது சுதந்திர தினம் நாளை மறுதினம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், வர்த்தக நிலையங்களில் முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப் பகுிதிக்கு தேசியக் கொடியை பறக்க விடுமாற அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.