எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக்கட்சியான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் களமிறக்கவுள்ள இரண்டு வேட்பாளர்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.
வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும், முல்லைத்தீவு வித்தியானந்தா பாடசாலையின் முன்னாள் அதிபர் கந்தையா சிவலிங்கமும் நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.