தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்வதற்காக அதன் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார்.
இதயம் சின்னத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த கட்சியை பதிவு செய்ய விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளரின் செயலகத்தில் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சுகத் ஹேவாபத்திரன,
“ சஜித் பிரேமதாச “இதயம்” சின்னத்தில் போட்டியிட முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் நான் இந்த கட்சியை சில காலங்களுக்கு முன்னர் இந்த பெயரில் பதிவு செய்தேன். இதனால், அதற்கான உரிமை எனக்கே இருக்கின்றது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இதனை பதிவு செய்யுமாறு நான் கோருகிறேன். கட்சியின் யாப்பு உட்பட ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன. தேவை ஏற்படும் போது அவற்றை என்னால் சமர்ப்பிக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.