அண்மையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் சஜித் பிரேமதாச தலைமையில் பல இளைஞர்களுக்கு இம்முறை வேட்புமனு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் பிரபலமானவராக இருந்த மேஜர் மோன்டி ஜயவிக்ரம மட்டுமல்லாது ஜெனரல் ரஞ்சன் விஜேரத்னவின் பேரனான வெலிகம நகரபிதா ரொஹான் டி ஜயவிக்ரம, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி எராந்த வெலியங்கே, கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனாநாயக்கவின் புதல்வர் கனிஸ்க சேனாநாயக்க, முன்னாள் அமைச்சர் ஹேமகுமார நாணயக்காரவின் புதல்வரான சட்டத்தரணி தாரக நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கலப்பத்தியின் புதல்வர் சத்துர கலப்பத்தி ஆகிய இளம் அரசியல்வாதிகள் அதில் அடங்குகின்றனர்.