மட்டக்களப்பில் இரண்டு நிலையங்களில் 685 பேர் நோய்த் தடுப்பு!

2 sac
2 sac

மட்டக்களப்பில் இரண்டு நிலையங்களில் 685 பேர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மிகவும் குறுகிய காலத்தில் அவர்களுக்கு வழங்க முடியுமான அதிகபட்ச வசதிகளை தயார்படுத்துவதற்கு இராணுவத்தினரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்ததாக இராணுவ பணிக்குழாம் பிரதானி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

ஹெந்தலை மற்றும் தியத்தலாவை மத்திய நிலையங்களும் நோய்த் தடுப்புக்காக தயார்படுத்தப்பட்டுள்ளன.

தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் இருந்து வருகை தரும் இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் 14 நாட்கள் நோய்த் தடுப்புக்காக குறித்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் ஏனைய வசதிகளையும் முடியுமானளவு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.