கொரோனா வைரஸ் உட்பட வைரஸ் தொற்று நோய்களைக் கண்டுப்பிடிப்பதற்கான பி.ஆர்.சி. இயந்திரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுகாதார அமைச்சரிடம் கையளித்தார்.
பிரதமரின் விஜயராம இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது இயந்திரம் கையளிக்கப்பட்டது.
30 ஆயிரம் டொலர் பெறுமதியான இந்த இயந்திரம் கொரியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவரை அடையாளப்படுத்த முடியும். மிக இலகுவில் பயன்படுத்தக் கூடிய இந்த இயந்திரம் பிரதமருக்குத் தனிப்பட்ட முறையில் கிடைக்கப் பெற்ற பரிசாகும்.
கொரோனா வைரஸ் வைரஸ் உலக நாடுகளில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனக்குக் கிடைத்த தனிப்பட்ட பரிசை சுகாதரா அமைச்சுக்கு வழங்கப் பிரதமர் தீர்மானித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.