இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.
பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, “தவறான செய்திகள், வதந்திகளால் ஏமாற வேண்டாம். தேவையற்று அச்சமடைய வேண்டாம்” எனவும் பொதுமக்களைப் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.