கல்விச் சுற்றுலாக்களை இடைநிறுத்தியது அரசு

ww 9
ww 9

கொரோனா தொற்று தொடர்பான அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இலங்கையின் கல்வி அமைச்சு மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அவசர அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.

மறு அறிவித்தல்வரை பாடசாலைகளின் அனைத்துக் கல்விச் சுற்றுலாக்களையும் இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த அறிவித்தலைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது