கொரோனா தொற்று சந்தேகமா? பரிசோதனை இடங்கள் அறிவிப்பு

8 8ad
8 8ad

நீங்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக சந்தேகம் இருந்தால் உங்களைப் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வைத்தியசாலைகள் மாவட்ட ரீதியாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.

உங்களுக்கு காய்ச்சல், இருமல் அல்லது சுவாசப் பிரிச்சினை இருந்தால் அறிவிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.

அங்கு கொரோனா தொற்று பரிசோதனைகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் இந்த வசதிகள் உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ளத் தனியார் வைத்தியசாலைகளுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது