கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த 2 ஆவது நபர் நீர் கொழும்பு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்கைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார் என்று
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் என்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
அத்துடன் உயிரிழந்த இரண்டாவது நபரின் குடும்ப உறுப்பினர்கள் 13 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் குறித்த தனியார் வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் உயிரிழந்த நபரின் இறுதிக்கிரியைகள் நேற்றிரவு நீர்கொழும்பு மாநகர சபை பொது மயான பூமியில் இடம்பெற்றிருந்தது. குறிப்பிடத்தக்கது .